இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! சீரக கஞ்சி !
இ ஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர...
https://pettagum.blogspot.com/2017/05/blog-post_12.html
இஸ்லாமிய
மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது
கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக
ஈர்ப்பு... இவையே நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கம். சூரிய உதயத்துக்கு
முன்பாகவே (காலை 5 மணி வாக்கில்) நோன்பு தொடங்கிவிடும்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
சீரக கஞ்சி
தேவையானவை:
சீரக சம்பா அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - 6 (தோலுரிக்கவும்)
உரித்த பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - அரை கப்
சீரகம் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி விழுது - கால் டீஸ்பூன்
புதினா இலைகள் - 8
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு, வாசனை வரும் வரை (கருகாமல்) நன்கு வறுத்து எடுக்கவும். அரிசியைக் கழுவி களையவும். கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 5 கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி... தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர்விட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் நெய்யைவிட்டுச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த அரிசி - பருப்பு கஞ்சி, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவி இறக்கவும். பருப்பு வடை, சமோசா, சிக்கன் ரோலுடன் பரிமாறவும்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
சீரக கஞ்சி
தேவையானவை:
சீரக சம்பா அரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - 6 (தோலுரிக்கவும்)
உரித்த பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - அரை கப்
சீரகம் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி விழுது - கால் டீஸ்பூன்
புதினா இலைகள் - 8
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெறும் வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு, வாசனை வரும் வரை (கருகாமல்) நன்கு வறுத்து எடுக்கவும். அரிசியைக் கழுவி களையவும். கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 5 கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி... தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர்விட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் நெய்யைவிட்டுச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த அரிசி - பருப்பு கஞ்சி, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவி இறக்கவும். பருப்பு வடை, சமோசா, சிக்கன் ரோலுடன் பரிமாறவும்.
Post a Comment