நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!

நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர் சிலர். நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன. இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ...

நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர் சிலர்.
நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன. இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும் எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக் கொள்கிறோம்; இது அவசியமில்லை.
ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர் விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம் சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.
இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.
ஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள், குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக் கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது; சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம் பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.
நாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு, மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது; இதுவும், மிக ஆபத்தானது.
இயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.
ஆங்கிலத்தில், 'புட் அப்' செய்வது என்று, ஒரு சொல்லாட்சி உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது என்று சொல்லலாம்.
வாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது; சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது; சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை, அசல் என்பது; பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, 'சாருக்கு நான் தான் எல்லாம்...' என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய ரகத்தில் தாராளமாக சேர்க்கலாம்.
இந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது. உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.
ஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்; நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.
இந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், 'அந்த ஆளா... சரியான ஷோக்கு பேர் வழியாச்சே...' என்கிற பெயர் தான், கடைசியில் மிஞ்சும்.
தேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.
பிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும் என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன். ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.
நம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று சுட்டிக்காட்டப்படும் போது, 'உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்... எல்லாம் வசதிக் குறைவால் தான்... என்ன செய்வது...' என்று ஏற்றுக் கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.
பிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும், பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒருபோதும், ஈட்டித் தராது.
செயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ ஒரு நொடியில்! இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்!

லேனா தமிழ்வாணன்


Related

பெட்டகம் சிந்தனை 1308561097648408760

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item