டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்?

டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்? சமீப காலமாக இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் பெருகிவருவதால், ...

டேர்ம் இன்ஷூரன்ஸ்...ஏன், எதற்கு எப்போது அதிகரிக்க வேண்டும்?

சமீப காலமாக இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் பெருகிவருவதால், எங்களுக்கு ‘டேர்ம் இன்ஷூரன்ஸ்தான் வேண்டும்’ என்று இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளிடம் மக்கள் வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்கள்.  இந்தத் தகவல், டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்து மக்களுக்கு இருந்த தவறான புரிதல் விலகியிருப்பதைக் காட்டுகிறது. இன்ஷூரன்ஸ் என்பது, ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் எதிர்பாராமல் இறக்க நேரிட்டால், அந்தக்  குடும்பம் எந்தவித பொருளாதாரப் பாதிப்பும் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படுவது. இது, லாபம் பெறுவதற்காகச் செய்யப் படும் சேமிப்போ அல்லது முதலீடோ அல்ல என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

சரி, பாதுகாப்பு கருதி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்கிறோம். ஆரம்பத்தில் எடுத்த அளவிலேயே டேர்ம் இன்ஷூரன்ஸை கடைசிவரை தொடரலாமா? கூடாது என்றால் ஏன் கூடாது, எதனால் டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், எதன் அடிப்படை யில் அதிகப்படுத்துவது போன்ற கேள்விகளுடன் நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷிடம் பேசினோம். அவர் கொடுத்த விளக்கமான பதில் இங்கே உங்களுக்காக...
பாதுகாப்புக்குத்தான் இன்ஷூரன்ஸ்!
“ஒருவர் பெறும் சம்பளத்தின் அடிப்படையில் 20 மடங்குக்கு டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. அப்போதுதான் அவர் இல்லாமல் போனாலும், கிடைக்கும் காப்பீட்டுத் தொகை அவரது குடும்பத்தாருக்குப் பயனுள்ளதாக இருக்கும். யாருடைய, எதனுடைய பாதுகாப்புக்கெல்லாம்  டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம் எனில், குடும்பச் செலவுகள், கடன்கள் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டு எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் ஆரம்பத்தில் எடுத்த டேர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீட்டு அளவை கடைசிவரை அப்படியே தொடரலாமா என்று கேட்டால், கூடாது என்பதே சரியான பதில். எந்தெந்த காலத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இனி சொல்கிறேன்.

அதிகப்படுத்துவது அவசியம்!
“ஒருவர் கல்யாணத்துக்கு முன்பு, கல்யாணத்துக்குப் பின்பு, ஒரு குழந்தை பிறந்த பிறகு, இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மற்றும் இதற்கிடையில் கார் கடன், வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அந்தச் சமயங்களில் என ஒருவர் எடுத்திருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீட்டு அளவை அதிகரித்துக் கொள்வது அவசியம். அப்படி எடுத்தால்தான், ஒரு குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறமாதிரி அமையும்.
கல்யாணத்துக்கு முன்..!
கோபி என்பவர் கல்யாணத்துக்கு முன் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தார். அவருக்கு அப்போது வயது 25. அன்றைய நிலையில் அவரது ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம். இவருடைய குடும்பத்துக்கான ஆண்டுச் செலவு ரூ.1.80 லட்சம். தனது வருமானத்திலிருந்து சேமிப்புக்காக இவர் ஒதுக்கும் தொகை ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம். இந்தச் சமயத்தில் கோபி தனது பெயரில் ரூ.63 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் (வருமானத்திலிருந்து 15-16 மடங்கு) பிளான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கல்யாணத்துக்குப் பின்..!
கோபி தனது 28-வது வயதில் திருமணம் செய்துகொள்கிறார் எனில், அப்போது அவருக்கு ஆண்டு வருமானம் (சம்பள உயர்வு 10%) ரூ.5.32 லட்சமாக அதிகரித்திருக்கும். அதேபோல, குடும்பத்துக்கான ஆண்டுச் செலவு ரூ.2.39 லட்சமாகவும் (பணவீக்கம் 10%), முதலீட்டு அளவு ஆண்டுக்கு ரூ.1.86 லட்சமாகவும் அதிகரித்திருக்கும். இதன் அடிப்படையில் தனக்கு மட்டும் ரூ.81 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே செய்திருக்கும் முதலீட்டின் வளர்ச்சியானது அன்றைய நிலையில் அவரிடம் 7.45 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும் என்பதால் கல்யாணத்துக்கு முன்பு ஏற்கெனவே எடுத்துவைத்திருக்கும் ரூ.63 லட்சம் இன்ஷூரன்ஸை, கோபி 76 லட்சமாக அதிகரித்துக் கொள்ள லாம். கோபியின் மனைவியும் வேலைக்குச் செல்பவராக இருப்பின், அவரும் தனது வருமானத்தில் 15 மடங்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

முதல் குழந்தை மற்றும் கார் கடனுக்குப் பிறகு!
கோபிக்கு 30-வது வயதில் முதல் குழந்தை பிறக்கிறது. அதேசமயத்தில் காருக்கான தேவை ஏற்படவே, வங்கியில் கடன் பெற்று காரை வாங்குவதாக வைத்துக்கொள்வோம்.

இப்போது அந்தக் குழந்தையின் எதிர்காலத் தேவைகளையும் (குழந்தையின் கல்வி மற்றும் திருமணம் - ரூ.15 லட்சம்), காருக்கான கடன் (ரூ.5 லட்சம்) தொகையையும் கருத்தில் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் அவருடைய ஆண்டு வருமானம் 6.44 லட்சம் ரூபாயாகவும், குடும்பத்துக்கான ஆண்டுச் செலவு 2.89 ரூபாயாகவும், அவருடைய அன்றைய ஆண்டு முதலீடு 2.22 லட்சம் ரூபாயாகவும் அதிகரித்திருக்கும்.
25–வது வயதிலிருந்து செய்துவந்த முதலீடானது 13.52 லட்சம் ரூபாயாகவும் உயர்ந்திருக்கும். அதனால் தற்போதைய நிலையில் அவருக்குத் தேவையான டேர்ம் இன்ஷூரன்ஸ் அளவு 1.06 கோடி ரூபாய்.
ஏற்கெனவே 76 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் இருப்பதால், 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது.

இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு!
கோபியின் 33-வது வயதில்  இரண்டாவது குழந்தை பிறப்பதாகக் கொண்டால், அந்த நேரத்தில் குடும்பத்துக்கான தேவை இன்னும் அதிகரித்திருக்கும். இந்தச் சமயத்தில் வீட்டுத் தேவைகள், இரு குழந்தைகளின் எதிர்காலத் தேவைகள், கார் கடன் (தனது 30 வயதில் வாங்கிய கார் கடன் மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.2.30 லட்சமாகக் குறைந்திருக்கும்) என எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.1.19 கோடிக்கு  டேர்ம் இன்ஷூரன்ஸ் கோபியிடம் இருக்க வேண்டும். ஏற்கெனவே ரூ.1.06 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருப்பதால், மேலும் ரூ.13 லட்சத்துக்கு  டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகப்படுத்திக் கொள்வது அவசியம்.
வீட்டுக் கடன் வாங்கியதற்குப் பிறகு!
கோபியின் 35-வது வயதில் வசிக்கச் சொந்தமாக வீடு இல்லை என்பதைத் தவிர, மற்ற முதலீடு என அனைத்தும் பூர்த்தியாகி இருக்கிறது. தற்போது இவருக்கான ஆண்டுச் சம்பளம் ரூ.10.37 லட்சம் என்பதால், ரூ.35 லட்சத்துக்கு வீட்டுக் கடன் பெற்று சொந்தமாக வீட்டை வாங்குகிறார் எனில், அந்தக் கடனை அவர் இல்லாதபோது அவரது  மனைவி அடைப்பதற்கான முன்னேற்பாட்டை கோபி செய்துவைக்க வேண்டும். 
 
அதாவது, அந்த வீட்டுக் கடன் தேவைக்கான டேர்ம் இன்ஷூரன்ஸையும் கோபி எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது அவரிடம் இருப்பது ரூ.1.19 கோடிக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ். ஆனால், வீட்டுக் கடனுக்குப் பிறகு அவருக்குத் தேவைப்படுவது, ரூ.1.48 கோடி. அதனால் ரூ.29 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸை கோபி அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்த வயதில் கோபி தனது கார் கடனை முழுவதுமாகக் கட்டி முடித்திருப்பார்.
ஆனால், அடுத்த 40-வது வயதில் சம்பளம் அதிகரிப்பு, வீட்டுத் தேவைகள் அதிகரிப்பு மற்றும் வீட்டுக் கடன் பாக்கி போன்றவற்றால் டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவையும் அதிகரிக்கும். அதனால் ஏற்கெனவே எடுத்துவைத்திருக்கும் ரூ.1.48 கோடியுடன் ரூ.20 லட்சம் அதிகரித்து, ரூ.1.68 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸை வைத்துக்கொள்வது நல்லது.  
அதேசமயத்தில், அவர் வருடா வருடம் செய்துவந்த முதலீடு ரூ.93.57 லட்சமாக வளர்ந்திருக்கும். அதற்கடுத்து கோபியின் 45-வது வயதிலும் சம்பள உயர்வு மற்றும் தேவை உயர்வு காரணமாகவும், வீட்டுக் கடன் இருப்பதாலும் டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவையானது அதிகரித்திருக்கும். தற்போது அவரிடம் ரூ.1.71 கோடிக்கு டேர்ம் காப்பீடு இருக்க வேண்டும் என்பதால், ஏற்கெனவே இருக்கும் இன்ஷூரன்ஸ் தொகையில் ரூ.3 லட்சத்துக்கு அதிகரித்துக் கொள்வது நல்லது.

இந்த வருடத்தில் கோபியின் முதலீட்டின் மீதான வருமானம் ரூ.1.97 கோடியாக வளர்ந்திருக்கும். இந்த முதலீடு கோபியின் 50-வது வயதில் ரூ.3.94 கோடியாகவும், 55-வது வயதில் ரூ.7.57 கோடியாகவும் வளர்ந்திருக்கும். காரணம்,  அந்த  வயதில் அவரது ஆண்டு வருமானம் ரூ.69.79 லட்சமாகவும், ஆண்டு முதலீடு ரூ.24.42 லட்சமாகவும் இருந்திருக்கும்.

முதலீட்டின் மீதான வளர்ச்சி!
ஆனால், கோபிக்கு தனது 50-வது வயதில் வீட்டுக் கடன்  ரூ.15 லட்சமாகக் குறைந்திருக்கும் என்பதாலும், அதேசமயத்தில் முதலீட்டின் மீதான வருமானம் ரூ.3.94 கோடியாக வளர்ந் திருக்கும் என்பதாலும் டேர்ம் இன்ஷூரன்ஸ் அளவைஅதற்கு முன்பிருந்த ரூ.1.71 கோடியிலிருந்து ரூ.1.26 கோடியாகக் குறைத்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைக் கட்டவேண்டிய அவசியமில்லை.

55-வது வயதுக்குப் பிறகு செய்துவந்த முதலீட்டில் கிடைத்த வருமானமே ரூ.7.57 கோடியாக இருப்பதால், இந்தச் சமயத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது கோபிக்குத் தேவையில்லாத ஒன்று. அதனால் இதுவரை எடுத்துள்ள அனைத்து பாலிசிகளையும் நிறுத்திக் கொண்டு, கிடைத்திருக்கும் முதலீட்டு வருமானத்தை 10% வருமானம் தரக்கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம். இதற்கிடையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கோபிக்கு அசம்பாவிதம் நடந்திருக்கும்பட்சத்தில், அப்போது அவர் எடுத்துவைத்திருந்த காப்பீட்டுத் தொகையை அவரது மனைவி பெற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை வழிநடத்தலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸை அதிகரிக்கும் தொகைக்குத் தனியாக டேர்ம் பிளான் களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், புதிய பாலிசிகள் எடுக்கும்போது ஏற்கெனவே இருக்கும் பாலிசி குறித்த விவரங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் மறைக்காமல் சொல்வது நல்லது. அப்போதுதான் க்ளைம் செய்யும்போது சிக்கல் இல்லாமல் இருக்கும்” என்றார்.
ஏற்கெனவே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தவர்கள் இதைக் கவனிக்கலாமே!     
            

Related

இன்ஷூரன்ஸ் 6671057654851174821

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item