கணவன் மனைவி - பாலியல் இயற்கை மருத்துவக் குறிப்புகள்!

 கணவன் மனைவி - பாலியல் இயற்கை மருத்துவக் குறிப்புகள்  [ மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா? - வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா? - கருவுற்ற பெண்க...



 கணவன் மனைவி - பாலியல் இயற்கை மருத்துவக் குறிப்புகள் 
[ மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா? - வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா? - கருவுற்ற பெண்கள் வாந்தி நிற்க - பிரசவ வேதனை குறைய வேண்டுமா? - முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? - ஆண்மை பலகீனமா? - வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க - மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா? –
விதை வீக்கம் தணிய - அரைக்கரப்பான் வந்துவிட்டால் - மறைவான ரணங்கள் ஆற - உடல் அழகு பெற சிம்பிள் மெத்தேட் - கருச்சிiவு அடிக்கடி ஏற்படுகிறதா? - மசக்கை காலத்தில் வயிற்று வலியா? - மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா? - உற்ற வயதில் பருவமடையாவிட்டால் - ஹிஸ்டீரியா நோய் குணமாக - மார்பகங்கள் தேர்ச்சி பெற - பால் பெருக இலகு வைத்தியம் - திருமணம் நிச்சயமாகிவிட்டதா?
தேன் நிலவுக் காலங்களில் - இரத்தத்தின் தூய்மைக்கும் சுறுசுறுப்புக்கும் - துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா? - விந்து கெட்டிப்பட வேண்டுமா? - விந்து பெருக வேண்டுமா? - நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா? - கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி? - ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா? - ஆண்குறி பருக்க வேண்டுமா? தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக - இச்சையைத் தூண்ட - இல்லற இன்பம் பெற - தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள.]
 மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா? 
1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.

2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.

 வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா? 
ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும்.

 கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க : 
புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக்கொள்ளவும். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களின் வாந்தி நின்றுவிடும்.

 பிரசவ வேதனை குறைய வேண்டுமா? 
மாலதி மலர்ச்செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, கட்டி மோருடன் கலந்து உபயோகித்தால் பிரசவ வேதனை குறையும், சுகப்பிரசவமாகும்.

 முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? 
பசும்பாலைக் காய்ச்சினால் மேலே ஏடு படியும். இதை எடுத்து முகத்தின் மீது தடவி வரலாம். இவ்விதம் சில நாட்கள் தடவி ஊற வைத்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

 ஆண்மை பலகீனமா? 
திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனதில் உள்ள ஒருவித பயம். தகாத எண்ணம். வாதம் போன்ற நோய்களுக்கு தாளகம், மனோசிலை போன்ற சுத்தம் செய்யாத மருந்துகளை அருந்துவதுதான் காரணமாகும்.

 வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க : 
ஆனை நெருஞ்சியிலை தழையைச் சுத்தம் செய்து நீராகாரத்தில் தேய்க்க வழுவழுப்பான பொருள் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும்.

 மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா? 
வெங்காயப் பூவை நன்றாக உலரவைத்து, இடித்துத் தூள் செய்து தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக ஆகும். ஒரு வாரமாவது குடித்து வர வேண்டும்.

 விதை வீக்கம் தணிய : 
1. பலாப்பூவை நசுக்கி, சற்று வேக வைத்து விதை வீக்கமுள்ள இடத்தில் பற்றிட்டு வந்தால் விதை வீக்கம் தணியும்.

2. பவழமல்லிப் பூவைக் கொண்டு வந்து வதக்கி வைத்துக் கட்டினால் விi வீக்கம் குறைந்து வரும். சீக்கிரத்தில் சரியாகிவிடும்.

 அரைக்கரப்பான் வந்துவிட்டால் : 
தொடையின் இடுக்குகளில் மர்மஸ்தானங்களைப் பற்றிக்கொண்டு உண்டாகும் ஒருவகை சொரிப்புண் இது. இது நீர் சம்பந்தமாக ஏற்படக்கூடியது. கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் - வகைக்கு ஒரு கிராம் எடுத்து பொடித்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் ஏற்ற வேண்டும். தண்ணீர் சுண்டி எண்ணெய்ப் பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அரைக்கரப்பான் மீது தடவி வந்தால் சீக்கிரத்தில் புண் ஆறிவிடும்.

 மறைவான ரணங்கள் ஆற : 
ஆண்குறி, பெண்குறி, ஆசனவாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டிருந்தால் குங்குமப்பூவில் தேனை விட்டு நன்றாக அரைத்து சாந்து போல் ஆக்கி ரணம் ஏற்பட்டுள்ள பாகங்களில் நன்றாகப் பூசி வந்தால் சில நாட்களில் சரியாகிவிடும்.

 உடல் அழகு பெற சிம்பிள் மெத்தோட் : 
1. இரவில் படுக்கப்போகும் முன் பசும்பாலில் தேனும், மஞ்சள் பெடியும், குங்குமப்பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் மினுமினுப்பு தோன்றும்.

2. பொன்னாங்கண்ணி கீரையை அவ்வப்பொழுது தனியாகவோ அல்லது பருப்புடனோ கலந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் உடல் இரும்பாகும்.

 கருச்சிiவு அடிக்கடி ஏற்படுகிறதா? 
மாதுளை வேர்ப்பட்டை, அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு எடுத்து உளர்த்தி தூள் செய்து, ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வந்தால் போதும். அதன்பிறகு கருச்சிதைவு ஏற்படாது. கர்ப்பம் தங்கும்.

 மசக்கை காலத்தில் வயிற்று வலியா? 
மசக்கை காலத்தில் சிலருக்கு இலேசான வயிற்று வலி ஏற்படுவதுண்டு. அதற்கு ஆம்பல் பூவுடன் விளாமிச்சை வேரையும் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி, சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடவும்.

 மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா? 
பயணங்களிலோ அல்லது விசேஷ காலங்களிலோ மாதவிலக்கு தள்ளி வரவேண்டும் என்று விரும்பும் பெண்கள் தினசரி காலையில் பொட்டுக் கடலையை (உடைத்த கடலையை) வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாதவிடாய் சற்றுத் தள்ளி வெளிப்படும். எவ்வளவு நாள் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அத்தனை நாட்கள் உடைத்த கடலையை சாப்பிடலாம். உடம்புக்கு கெடுதல் இதனால் ஒன்றுமில்லை. ஆனால், இதற்குள்ள மாத்திரையை சாப்பிடுவதூன் கெடுதல்.

 மாதவிலக்கு நின்ற சிரமப்பட்டால் : 
நாட்டு வைத்தியக் கடையில் அன்னபேதி, கரியபோளம் இலை கிடைக்கும். 20 கிராம் அன்னபெதி, 10 கிராம் கரியபோளம், லவங்கப்பட்டைத் தூள் 10 கிராம் சேர்த்து இடித்து, தேன் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி, வேளைக்கு இரண்டாக நிலவேம்பு கஷாயத்துடன் சாப்பிட்டு வந்தால் அந்த சிரமம் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால் கருவுற்ற பெண்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

 உற்ற வயதில் பருவமடையாவிட்டால் : 
செம்பரத்தைக்கு ருது உண்டாகக்கூடிய குணம் உண்டு. அதனால் செம்பருத்திப் பூவை எந்த வகையினாலாவது உள்ளுக்குச் சாப்பிட கொடுத்து வரவும். சில நாட்களில் அந்தப்பெண் ருதுவாகிவிடுவாள்.

 ஹிஸ்டீரியா நோய் குணமாக : 
இது, நரம்பு பலவீனமான பெண்களுக்குத்தான் ஏற்படும். இதை ‘பேய் பிடித்து’ ஆடுவதாகக் கூறுவார்கள். பொன்னாவரை இலை, வேர், பூ இவைகளை வகைக்கு 40 கிராம் கொண்டு வந்து இலேசாகத்தட்டி ஒரு லிட்டர் நீரில் இட்டு, அரை லிட்டராக காய்ச்சி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.

 மார்பகங்கள் தேர்ச்சி பெற : 
மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும்.

 பால் பெருக இலகு வைத்தியம் : 
சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும்.

இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும்.

 தேன் நிலவுக் காலங்களில் : 
குஷாலாக தேன் நிலவுக்குச் சென்று உயர்ந்த ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கியிருப்பவர்கள் இரவுக்காலங்களில் உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.

 இரத்தத்தின் தூய்மைக்கும் சுறுசுறுப்புக்கும் : 
ஒரு பிடி கொத்துக் கடலையை முந்தின இரவே ஊற வைத்து விடுங்கள். சீமை அத்திப்பழம் இரண்டையும் அதில் கிளரிப்போட்டு ஊற வையுங்கள். காலையில் அப்படியே வேக வைத்து வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். மிகவும் சுவையாக இருக்கும். இந்த அத்திப்பழச் சுவைநீர் இரத்தத்தை தூய்மைப்படுத்துவதுடன் உடம்பிற்கு சுறுசுறுப்பையும் கொடுக்கும்.

 துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா? 
சிலருக்கு சீக்கிரத்தில் விந்து வெளியேறிவிடும். இதைத் தடுத்து நிறுத்த தாழம் பூவின் உள்ளே இருக்கும் பட்டு போன்ற பொடியை எடுத்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து இழைத்து ஆண்குறியின் மீது பூசிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் விந்து விரைவில் வெளியேறாது.

 விந்து கெட்டிப்பட வேண்டுமா? 
பொரித்து எடுத்த படிகாரத்தை பொடியாக்கி 15 கிராம் எடுத்து அதில் கற்கண்டுத் தூள் 50 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு, பத்து சம பாகமாகப் பொட்டலம் கட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு ஒரு பொட்டலம் வீதம் பத்து நாட்கள் காய்ச்சிய பசும் பாலுடன் சாப்பிட்டு வரவும். நீற்றுப்போன விந்து கெட்டியாகிவிடும்.

 விந்து பெருக வேண்டுமா? 
ஆளி விதையைப் பாலில் வேக வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் போதுமான அளவு சேர்த்து லேகியம் பொல் கிளறி காலை - மாலை, சுண்டைக் காயளவு உட்கொண்டு வந்தால் உடல் பலகீனம் நீங்குவதுடன் விந்தும் பெருகும்.

 நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா? 
1. நரம்புத்தளர்ச்சியை நீடிக்கவிடக் கூடாது. ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். அந்த நீரில் 1 அவுன்ஸ் வீதம் மூன்று வேளை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

2. கருவேலன் பிசினை எடுத்து காய வைத்து அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் அளவு பாலில் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகிவிடும்.

 கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி? 
ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கிமே! அதேசமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கிவிடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்களிலேயே ‘சொப்பன ஸ்கலிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.

 ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா? 
தனது ஆண்குறி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண்கள் உண்டா? அல்லது தனது கணவனின் ஆண்குறி வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்கள் தான் உண்டா?! இதோ அவர்கள் ஆசைக்கு அருமருந்து:

வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.

 ஆண்குறி பருக்க வேண்டுமா? 
சிலருக்கு ஆண்குறி வயதிற்குத் தகுந்த பருமன் இருக்காது. அவர்கள் 15 சங்கம்பழம் கொண்டு வந்து பிழிந்து சாறு எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும். அரை கிராம் அளவு பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்து, அந்தப் பழச்சாற்றை தேவையான அளவு விட்டு நன்கு நசித்து ஆண்குறியின் மீது தடவி வர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தடவி வர வேண்டும். அதற்குள் ஆண்குறி நன்கு பருத்து ‘திண்’ணென்று ஆகிவிடும்.

 தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக : 
1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.

2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.

3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.

4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.

 இச்சையைத் தூண்ட : 
ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் - பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.

 இல்லற இன்பம் பெற : 
பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.

 அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள : 
கல்யாணப் பூசணிக்காயின் (சாம்பல் பூசணி) சாற்றை ஒரு அவுன்சுக்கும் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது கற்கண்டோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளலாம்.
(இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கலாம்.)
- ரதிப்ரியா ‘தாம்பத்திய வழிகாட்டி’ நூலாசிரியை

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6592120421795202999

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item