பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியராக பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு ! உங்களுக்கு உதவும் சட்டங்கள்!!

பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியராக பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு! சென்னை, ...

பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியராக பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, அக்.19 பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியராக பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள் ளது. தர்மன், உமா உள்பட 6 பேர் 10-ஆம் வகுப்பு முடித்து, ஆசிரியர் பயற்சி பெற்றனர். அதன் பிறகு, கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு களில் ஓவிய ஆசிரியர் களாக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.

இதன் பிறகு, சென்னைப் பல்கலைக்கழகம், அண் ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி, பி.லிட்., பட்டப் படிப்பில் சேர்ந்தனர். அதன் பிறகு, பி.எட். பட்டம் பெற்றனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை தமிழ் ஆசிரி யர்களுக்கானப் பதவி உயர்வு வழங்கி 131- பேர் அடங்கிய பெயர் பட்டி யலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வெளியிட்டது.

அதில், இவர்கள் 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை யிடம் கேட்ட போது, பிளஸ் 2 முடிக்காமல், பட்டப் படிப்பு பெற்றதால், பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியில்லை எனக் கூறப் பட்டது.

இதை எதிர்த்து 6 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், " பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) வின் விதிப்படி பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு எழுதியே நாங்கள் பட்டம் பெற்றோம். ஆனால், நாங்கள் பிளஸ் 2 படிக்காமல் பட்டம் பெற்றதால் பதவி உயர் பெறுவதற்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

எனவே, பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் பெற்ற பட்டம் செல்லும் என அறிவித்து, எங்க ளுக்குப் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட வேண் டும்' என குறிப்பிட்டி ருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி டி.ஹரி பரந்தாமன் முன்பு சனிக் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் பல்கலைக் கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பிறகே பட்டப் படிப்பு பயின்றுள்ளனர். யுஜிசி விதிப்படி பிளஸ் 2 முடித்து விட்டு பட்டப்படிப்பில் சேரலாம்.

பிளஸ் 2 படிக்காத வர்கள் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர் வில் வெற்றி பெற்றும் பட்டம் பயிலலாம்.

மனுதாரர்கள் இரண் டாவது முறையில் பட்டம் பெற்றுள்ளனர். இதன் பிறகு அவர்கள் பிளஸ் 2-விலும் தேர்ச்சி பெற்றுள் ளனர். யுஜிசி முறைப்படியே இவர்கள் பயின்றுள்ளனர். இவர்களது பட்டங்களை பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

எனவே, மனுதாரர்கள் பெற்ற பட்டம் செல்லும். அதனால், மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள்.

எனவே, பதவி உயர்வு பெற மனுதாரர்களுக்கு தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறைப் பிறப்பித்த உத்தரவு, உச்ச நீதிமன்றம், யுஜிசி விதிமுறைகள், தமிழ்நாடு கல்வித்துறை பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது.

எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங் களுக்குள் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித் துள்ளார்.

Related

உபயோகமான தகவல்கள் 7813820017172709576

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item