ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - ஒல்லிப் பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி!
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 14 ஒல்லிப் பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி டாக்டர் கு.சிவராமன், 'ஏன் பாட்டி... ஒல்லியா இருக்கிறது...
https://pettagum.blogspot.com/2014/09/blog-post_91.html
ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 14
ஒல்லிப் பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி
டாக்டர் கு.சிவராமன்,
'ஏன்
பாட்டி... ஒல்லியா இருக்கிறது அழகா, ஆபத்தா? இப்பல்லாம் என் கிளாஸ்
பொண்ணுங்க இப்ப மணிபர்ஸ் அளவுக்குத்தான் சாப்பாடு எடுத்துட்டு வர்றாங்க.'
'குறுக்கு சிறுத்திருப்பது பொண்ணுக்கு அழகுதான். அதுக்காக அநியாயத்துக்கு மெலிஞ்சுபோனா, அது சீக்குல கொண்டு விட்டு்டும்.''
'என்ன சாப்பிட்டாலும் குமார் மாதிரி சிலருக்கு, எடையே ஏற மாட்டேங்தே... அவங்க என்ன செய்யலாம் பாட்டி?''
'எடை அதிகரிக்கிறதுக்கு ஏராளமான விஷயம்
இருக்கு. முதல்ல பித்தமும், அதைச் சுரக்கும் கல்லீரலும் சரியா இருக்கணும்.
தினமும் சீரகத் தண்ணீர் குடிக்கணும். காலையில் இட்லிக்குப் புதினா,
கொத்தமல்லி சட்னி சாப்பிடணும். கரிசலாங்கீரைய நல்லாக் காயவெச்சு, பொடிச்சு,
வஸ்திரகாயம் செஞ்சு, தினமும் காலையில சாப்பிடறதுக்கு முன்னால அரை டீஸ்பூன்
தேன் கலந்து சாப்பிடலாம்.'
'பாட்டி... கல்லீரல்னாலே, காமாலைக்குத் தர்ற கீழாநெல்லி
தான் ஞாபகத்துக்கு வருது.''
''உண்மைதாண்டியம்மா. பித்தக்காரர்களுக்கு கீழாநெல்லி
தான் பெஸ்ட். பசிக்கான சுரப்புகள் சரியாக சுரக்காமப் போனா, கீழாநெல்லியை
வேரோடு பிடுங்கி, மோரில் சேர்த்து அரைச்சு காலையில் உணவுக்கு முன்னால
சுண்டைக்காய் அளவுக்கு சாப்பிடலாம்.
அதேமாதிரி மோர் சாதத்துக்கு மாவடு சேர்க்கும்போது, பித்தத்துல சீரற்ற சீரணத்தை சரியாக்கி, பசியையும் தூண்டும்.'
'அவ்வளவுதானா வேற ஏதும் இருக்கா பாட்டீ?'
'ஒல்லிப் பெண்ணுக்கு உளுத்தங்கஞ்சி, நோய் வாய்ப்பட்டு
மீண்டவருக்கு துவரை அரிசிக் கஞ்சி, அடிக்கடி பேதியாகிறவங்களுக்கு ஆரோரூட்
கஞ்சி, வத்தலா உடம்பு இருக்கிறவங்களுக்கு பஞ்சமூட்டக்கஞ்சினு உடலை
பருமனாக்க நிறைய கஞ்சி வகை இருக்கும்மா.'
''கஞ்சியா? ஜெயில் எஃபெக்ட் வருமே?''
'கஞ்சினாலே காய்ச்சி அருந்தறதுன்னு அர்த்தம்.
கைக்குழந்தை எடை கூடறதுக்கு, ராகி கஞ்சி கொடுக்கலாம். உடைச்ச புழுங்கல்
அரிசியில் கால் பங்கு பாசிப்பயறு எடுத்து, வறுத்து
திரிச்சுவெச்சுக்கணும். இதுல நீர்விட்டுக் காய்ச்சி சூடான பால், சர்க்கரை,
கொஞ்சம் பசுநெய், இல்லைனா தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் ரெண்டு, மூணு
தடவை கொடுக்கலாம். குழந்தை போஷாக்கா வளரும். ஸ்கூல் போற குழந்தைங்கன்னா,
எல்லா நவதானியமும் சேர்த்த கஞ்சியும், பயறுகள் போட்ட சத்துமாவுக் கஞ்சியும்
கொடுக்கணும்.''
''சத்துமாவுக் கஞ்சிக்கும், நவதானியக் கஞ்சிக்கும் என்ன வித்தியாசம் பாட்டி..?''
''அரிசி, கோதுமை, தினை, ராகி, கம்பு, வரகு, குதிரைவாலி,
சாமை, காடைக் கண்ணி்னு ஒன்பது தானியங்களை மட்டும் சேர்த்து தயாரிக்கிறது,
சத்து மாவுக் கஞ்சி. சில தானியங்களோட சோளம், கொண்டைக் கடலை, நிலக்கடலை,
பாதாம் பருப்பு, முளைகட்டிய பாசிப் பயறு, சுக்கு சேர்த்து திரிச்சு கஞ்சி
செய்றது நவதானியக் கஞ்சி. எடையை அதிகரிக்க, நவதானியக் கஞ்சியோட கொஞ்சம்
தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்துக்கலாம். சத்து மாவுக் கஞ்சி உடல்
எடையைக் கொஞ்சமா அதிகரிக்கிறதோட நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும்; புரதச்
சத்தையும் கொடுக்கும்.
இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, எள்ளுருண்டைனு எள்ளை அடிக்கடி சேர்த்துக்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு உளுந்து சோறோடு, எள்ளுத்துவையல் சேர்த்துக்கறது ரொம்பவே நல்லது. நேந்திரம்பழத் துண்டுகளோட, தேன் சேர்த்து இரண்டு வேளை குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தா, எடை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பாற்றலும் கூடும்.'
''சூப்பர் பாட்டி... நீயே உன் பேரன்கிட்ட, கஞ்சியைக் கொடுத்து சாப்பிடச்சொல்லு. என்னைய மாதிரி குண்டாயிடுவான் பாரேன்!''
Post a Comment