Wednesday, May 15, 2013 0 comments

ரிலாக்ஸ் ப்ளீஸ் மூன்று நாட்கள்!

வரிசையாக வாரத்தின் மூன்று நாட்கள் சொல்லுங்கள். ஆனால், கிழமைகள் பேர் வரக் கூடாது!

கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .

விடை: நேற்று, இன்று, நாளை!
0 comments

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு -- சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
 காரணங்கள்:
ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
  நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.
  பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
  அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
  நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
  ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.  
  தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.
  சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.  
  துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
  முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
  வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.  
  நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.
0 comments

வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்! நெல்லிக்கனி

''அவ்வைப்பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனிதான் அற்புதமான காயகல்பம். நம்ம தங்கம்மா வீட்டுல நிறைய நெல்லிக்கா இருக்காம். பறிச்சிட்டு வருவோமா..?'' என்றபடியே, வாசம்பாவின் விரல் பிடித்து நடக்கத் தொடங்கினாள் அம்மணி. 
வாசலில் உட்கார்ந்திருந்த தங்கம்மா, இருவரையும் பார்த்து, ''இது என்னடி அதிசயமா இருக்கு? ரெண்டு மருத்துவ சம்பந்திகளும் வழி தெரியாம என் வீட்டுக்கு வந்துட்டீங்களா?''
''அடிப் போடி இவளே... உனக்கு எப்பவும் குசும்புதான். உன் வீட்டுல, பந்திக்கு இல்லாத நெல்லிக்கா, பறிக்க ஆளில்லாம நிறையக் கிடக்குதுன்னு சேதி வந்திச்சு. அதான், எப்படி காக்காக்கு மூக்குல வேர்த்தமாதிரி நாங்க வந்துட்டோம் பார்த்தியா?''
'''கொல்லப்புறத்துல கொட்டிக்கிடக்கு... போய் அள்ளிக்கோங்கடி அரை நெல்லியை...''
''அரை நெல்லிக்கா நெறைய இருக்கு. ஆனா, பெரிய நெல்லிக்கா மரத்துல கொஞ்சமாத்தானே கிடக்கு. ஏன் அம்மணி?''
''நம்மூர்ல அரை நெல்லிக்காய்தான் அதிகமா வெளையுது. வட நாட்டுலதான் பெரிய நெல்லிக்காய் கிடைக்குது. ரெண்டுலயும் நிறைய மருத்துவக் குணம் இருக்குடி.
தெனமும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தா, உடம்புல தெம்பு கூடி, எப்பவும் இளமையாவே வெச்சிருக்கும். தொற்று நோய் எதுவும் வராது.
வாய் துர்நாற்றம் வீசினா, நெல்லிக்காயைக் காயவெச்சு அந்தப் பொடியை வாயில் போட்டுக் கொப்பளிக்கணும்.'' என்று அம்மணி நெல்லிக்காய் டிப்ஸ் தந்தபடியே, உதிர்ந்த நெல்லிக்காய்களையும், நாலஞ்சு மரக் கிளையையும் ஒடிப்பதைப் பார்த்து வாசம்பா,
''எதுக்கு அம்மணி... கிளையை ஒடிக்கிற... அதுல என்ன இருக்கு?''
''கிணத்துத் தண்ணில நெல்லிக்கா இலை, மரக்கிளையைப் போட்டா, தண்ணி அப்படியரு இனிப்பா இருக்கும்டி. இந்தத் தண்ணியில கண்ணைக் கழுவிட்டு வந்தா, கண் சிவக்கிறது, வலி, புண் எல்லாமே சரியாயிடும். சமையலும் ருசிக்கும்.''
''ஆமா... மா... நெல்லிக்கா சாப்பிட்டு உடனே தண்ணி குடிச்சா, தித்திப்பா இருக்குமே...'' என்றபடியே மடியில் நெல்லிக்காய்களை முடிந்தபடி, தங்கம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு, விறுவிறுவென அங்கிருந்து நடையைக் கட்டினர்.  
''முடி கொட்டுறதேனு கவலைப்பட்டாலே, முடி கொட்டும் வாசம்பா. நெல்லிக்கா தைலத்தை செஞ்சு வெச்சிக்கிட்டா அரை அடிக் கூந்தல்கூட ஒரே வருஷத்துல ஒரு அடிக்கு மேல வளர்ந்திடும். பச்சை நெல்லிக்காய்கூட துளசி, கடுக்காய் தோலு, கறிவேப்பிலை எல்லாத்தையும் சேர்த்து நல்லா அரைச்சிக்கணும். இந்த விழுதைத் துணியில மூட்டை மாதிரி கட்டி உத்திரத்துல தொங்கவிடணும். அதிலேர்ந்து துளித் துளியா சாறு வடிஞ்சிவிழும். இந்தச் சாறு அளவுக்கு மூணு மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சிக்கணும். இந்த எண்ணெயைத் தெனமும் தலையில் தடவிட்டு வந்தா முடி கொட்டுறது நின்னுடும். முடியும் அடர்த்தியா வளர ஆரம்பிச்சிடும்.''
''அப்படிப் போடு அருவாளை... முடியுள்ள சீமாட்டி கொண்டை முடிப்பாளாங்கிற மாதிரியில்ல என் கதை ஆகப்போகுது.  
சரி, லீவுக்கு சென்னையிலேர்ந்து வந்திருக்கிற ராசாத்தியோட பேத்திங்க, தலைமுடியில செம்பட்டை, மஞ்சளும், சிவப்புமா கலர் கலரா சாயம் போட்டிருக்காங்க அம்மணி. அதுவும் பார்க்க அழகாத்தான் இருக்கு.''  
''ஆமா வாசம்பா, வயசுக்குக்கூட வராத பிள்ளைங்க. கூடப்படிக்கிற பிள்ளைங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு இளநரையை மறைக்க முடிக்கு கலரைப் போட்டிருக்கறதா, சொன்னதுங்க. அதுக்கும் கைவசம் வைத்தியம் சொல்லிட்டுத்தான் வந்தேன்.
20 நெல்லிக்காய்கூட, எலுமிச்சை இலையைச் சேர்த்து நல்லா அரைச்சு பாலில் கலந்து, எங்கெல்லாம் நரை இருக்கோ, அங்க தடவி, ஒரு மணி நேரம் நல்லா ஊறவைக்கணும். மிதமா சூடு தண்ணீர்ல வாரம் ஒரு முறை, குளிச்சிட்டு வந்தா, இளநரை இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும்.''  
''ஓ...''
''நெல்லிச்சாறுகூட பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், சர்க்கரை நோயைத் தடுத்திடும்.  
நெல்லிக்காயை தேன்ல ஊறவெச்சு, காஞ்சதும், டப்பால போட்டுவெச்சு, தெனமும் ஒண்ணு சாப்பிடலாம். என் அப்பத்தா, டப்பாலேர்ந்து தெனமும் நாலு நெல்லிக்காய் எடுத்துத் தரும். இதைத்தான், நாட்டு மருந்துக் கடையிலேயே, டிரை நெல்லின்னு சொல்லி விக்கறாங்க. வாசம்பா.''
''நெல்லியில இத்தனை மருத்துவமாடீ?''
''இன்னும் கேளு... நெல்லிக்காய், உடம்புக்குக் குளிர்ச்சி. உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். மலமிளக்கி, சிறுநீர் பெருக்கியாவும் இருக்கும். ஆப்பிளை விடவும் நெல்லிக்காய்ல நிறைய சத்து இருக்குதுனுதான் உனக்கும் தெரியுமே!''
''அரை வயிற்றுக்கே ஆலாய் பறக்க... ஆப்பிளுக்கு எங்கே போறதுனு ஏக்கப் பெருமுச்சு விடற ஏழைகளுக்கே நெல்லிக்காய்தான் காயக்கல்பம். நெல்லிக்காயோட பலனை உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி சொல்லிட்ட.
அய்யய்யோ மறந்தேபோயிட்டேன் அம்மணி.... சூடு தாங்காம வயித்துவலி, அல்சரால அலர்றாரு கோனாரு. அவங்க வீட்ல உன்னைப் பார்த்தா கையோட அழைச்சிட்டு வரசொன்னாங்க.''
வாசம்பா பதட்டம் காட்ட, ''சூட்டைத் தணிச்சு, குளிர்ச்சியூட்ட வெந்தயக்கீரை இருக்கு... கையோட எடுத்திட்டுப் போயிடலாம் வாசம்பா...'' என்றபடி ஆயத்தமானார் அம்மணி. அப்புறம் என்ன... வெந்தயக்கீரை புராணம்தான்!
0 comments

குறைந்த கலோரியில் நிறைந்த உணவு...சமையல் குறிப்புகள்,

50-100 கலோரி டயட் ஃபுட்
''ஜங்க் ஃபுட்ஸ்க்கு இணையாகவும் சுவையாகவும் நொறுக்ஸ் கிடைச்சா, நாங்க ஏன் ஜங்க் ஃபுட்ஸ் பக்கம் 'ஜம்ப்’ பண்றோம்?'' என்பதே இன்றைய இளைஞர்களின் 'டேஸ்ட்’ டாக்!

''எதிலுமே புதுமை தேவையாக இருக்கிறது. அதிலும், உணவு விஷயத்தில் எல்லா வயதினரையும் சுண்டியிழுப்பது என்பது சற்று கடினம்தான். அதான், சுவையாக மட்டும் அல்லாமல், சத்தான நம் பாரம்பரிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெரைட்டியான டிஷ்களைத் தருகிறேன். பசியும் அடங்கும்.  உடலுக்கு தேவையான எனர்ஜியும் கிடைக்கும்'' என்கிறார் சென்னை, வடபழனியில் 'டயட் இன்’ என்ற உணவு விடுதியை நடத்திவரும் ஊட்டச்சத்து நிபுணர் காந்திமதி.  

முளைக்கட்டிய வெந்தய தோசை
செய்முறை: கால் கப் வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, முளைக்கட்டியதும், தோசை மாவுடன் சேர்த்து அரைத்து வார்க்கலாம்.  
பலன்கள்: உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிற்றுக்கடுப்பு, வயிற்று வலி குணமாகும். மாதவிடாய்க் கோளாறைச் சரிசெய்யும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் தடுக்கும்.  

ராகி பக்கோடா
செய்முறை: கடலை மாவுக்குப் பதிலாகக் கேழ்வரகு மாவைப் பயன்படுத்தியும் செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து  எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவேண்டும்.  
பலன்கள்: கேழ்வரகில் இரும்புச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்துகள் இருக்கின்றன. மலச்சிக்கல் வராது. உடல் இளைக்கும்.

வாழைப் பூ வடை
செய்முறை: வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டுக் கொதித்ததும், வடிகட்டி, பிழிந்து தனியாக வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்புடன், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, வேகவைத்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக்கொள்ளவும். அத்துடன் நறுக்கிவைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்து வடித்த வாழைப்பூவைச் சேர்த்துப் பிசைந்து காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.  
பலன்கள்: உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுக்கடுப்பு, அஜீரணக் கோளாறு மற்றும் வறட்டு இருமலைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  

தண்டை
செய்முறை:  பால், கசகசா, மிளகு, சோம்பு, குங்குமப்பூ, பாதாம் மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.  
பலன்கள்: இந்த ஊட்டச்சத்து பானம் வட நாட்டில் மிகப் பிரபலம். வளரும் குழந்தைகளுக்கு நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். எடை குறைந்த குழந்தைகளுக்கு தினமும் இரண்டு வேளை இந்த பானத்தைக் கொடுக்கலாம்.  
நவதானிய அடை
செய்முறை: அரிசி, பருப்பு வகைகள், எள், கொள்ளு, கொண்டைக்கடலை, காராமணி, நிலக்கடை, மசூர் தால் என விரும்பிய தானிய வகைகளை தண்ணீரில் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அடை பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் அடையாக வார்க்கலாம்.
பலன்கள்: புரதச் சத்து அதிகம் இருக்கிறது.  உடலை நல்ல திடமாக வைத்திருக்கும். வளரும் பிள்ளைகளுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். 
0 comments

அப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்!

தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப் பந்தில் தவழவிடும் நாள் வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும், பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா? 
''குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும். மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு'' எனச் சொல்லும் முதன்மைக் குடியுரிமை (மகப்பேறு) மருத்துவர் சித்ரா செல்வமணி, மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர்எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.
''இந்த விஷயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கிவிடுகிறது.
 முதலில் இப்போது நமக்குக் குழந்தை அவசியம்தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்ற£ல், தகுந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருவுற்ற பிறகு தொடர்ந்து செக்-அப்கள் செய்வது அவசியம். இதை தேவையற்ற செலவு என ஒருபோதும் நினைக்காமல், ஒத்துழைப்பு தரவேண்டியது முக்கியம்.
டாக்டர் சொல்லும் நேரத்தை ஒருபோதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். அதைவிட முக்கியமானது,  ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்லவேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.  
திருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது. அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடுதான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும்.  அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்புகளையும் வழங்குவது முக்கியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.
விரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை எண்ணெய்ப் பதார்த்தங்களை  தவிர்த்திடுங்கள்.
அடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.
கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்புதான். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்து தேவை இல்லாமல் பயம்வேண்டாம்.  
கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம்கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள். எந்த விஷயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம்.
கர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். நேரம் கிடைக்கும்போது, நீங்களே ஊட்டிவிடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.
 வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந்தாலும், ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும், அனைத்து டாக்குமென்ட்களையும் தேதிவாரியாக வைத்துக்கொள்ளுங்கள். இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.
மூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது’ என்பன போன்ற மூட நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சித்திரை மாதம் பிறக்கவேண்டிய குழந்தையை முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். இது முற்றிலும் தவறானது. இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மறவாதீர்கள்.
 பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே, பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக்கொள்வதும் மிகவும் நல்லது.
  குழந்தை பிறந்த பிறகு சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப்படுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரியவைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.  
சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து, மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.
ஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும்போது, பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகிவிடக்கூடாது.''
உளவியல்ரீதியில் பல பயனுள்ள விஷயங்களை அலசுகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ராஜ்மோகன்
''திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று இல்லை. உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு, இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப்பற்றி முடிவெடுங்கள். இல்லையெனில் குழந்தை பிறந்த பிறகு 'இப்ப நான் குழந்தை கேட்டேனா?’ என்ற வாக்குவாதம் ஏற்படலாம்.
 கர்ப்பமான பிறகு, நல்லபடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வது மனைவியின் வேலை; நமக்கு இதில் என்ன இருக்கிறது?’ என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.
மனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டிவிடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது, நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தைவிட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும்.
சில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை. சிலர் வற்புறுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு. இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.
குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். இதைக் கணவன் சகஜமாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.
பொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் குழந்தை பிறக்கும் காலகட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள். தவறில்லை.
'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை’ என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.
அப்பாவுக்கு நிகர் ஏதப்பா?
0 comments

மாணவப் பருவத்தினருக்கு யோகா பயிற்சி! ஆசனம்,

10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டுமொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் கூடும்.

தாடாசனம்
இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்துவிடாது. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும்.  
இரு கால்களையும் ஒன்றாகவைத்து நிற்க வேண்டும். கைகள் தளர்வாக பக்கவாட்டில் இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேலே உயர்த்தியபடியே, குதிகாலை உயர்த்த வேண்டும். தலைக்கு மேல் கைகள் சென்றதும், கைகளைப் பிணைத்து முடிந்த வரை முதுகை வளைக்க வேண்டும். ஓரிரு விநாடிகளுக்குப் பின் மூச்சை வெளியே விட்டபடி கைகளையும் குதிகால்களையும் ஒன்றாகப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இப்படி ஆறு முதல் எட்டு முறை செய்யலாம்.
பலன்கள்: உடலின் அனைத்து தசைகளும் இழுக்கப்பட்டு, நல்ல ரத்த ஓட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாகிறது. முதுகெலும்பு பலம் அடைவதால், ஆரோக்கியம் கூடுகிறது. கணுக்கால்கள், கெண்டைக்கால், கைகள், தோள்பட்டை தசைகள் கூடுதலாக இழுக்கப்படுவதால் வளரும் பருவத்தினருக்கு ஏற்றதாக அமையும். ரத்த ஓட்டம் சீராகி, நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சி அடையும்.  
வீரபத்ராசனம்
போர் வீரர்களுக்கான ஆசனம் என்று சொல்வார்கள். எளிமையாகச் செய்து உடலை வலிமையாக்குகிற ஆசனங்களில் இது மிகவும் முக்கியமானது.
நேராக நின்ற நிலையில், இடது காலை முன்பக்கமாக நீட்டவும். வலது கால் பாதத்தை சற்று வெளிப்புறமாகத் திருப்பி, நேராக நிற்க வேண்டும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக மேலே கொண்டுசெல்ல வேண்டும். அதே நேரத்தில் முன்புறம் உள்ள காலை மடக்கி, இரு கைகளையும் பிணைத்து நன்றாக முதுகை வளைத்து ஓரிரு விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு, மூச்சை வெளியேவிட்டுக்கொண்டே, கைகளைக் கீழே இறக்கியபடி, மடக்கிய முன் கால் முட்டியை நேராக்க வேண்டும். இதேபோல இரு காலுக்கும் சேர்த்து ஆறு முதல் எட்டு முறை செய்யலாம்.
பலன்கள்: மார்பு முழுப் பலம் பெறும். முதுகெலும்பு வலுப்படும். உடலுக்கு ஒட்டுமொத்த வலிமை கூடுவதால், சோம்பல் நீங்கி, புது சக்தி பெறுவதை உணர முடியும். அடிவயிறு நன்கு இழுக்கப்படுவதால், அந்தப் பகுதி நன்றாக வேலை செய்யும்.

அர்த்த உத்தானாசனம்
இரு கால்களையும் சமமாகவைத்து நேராக நிற்க வேண்டும். கைகள் பக்கவாட்டிலும், உள்ளங்கைப் பகுதி உடல்பக்கம் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடியே, இரு கைகளையும், முன்புறமாகத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். மூச்சை வெளியே விடும்போது முன் பக்கமாகக் குனிந்து, கைகளைப் பாதங்களுக்கு அருகில் வைக்க வேண்டும். இதன் பெயர் உத்தாசனம். இந்த நிலையில் இருந்து அர்த்த உத்தாசன நிலைக்குச் செல்ல வேண்டும்.
கைகளைப் பாதங்களுக்கு அருகில் வைத்தபடியே, மூச்சை உள்ளிழுத்து கைகள் மற்றும் மேல் உடலைப் பாதிநிலைக்கு மேலே உயர்த்த வேண்டும். இந்த நிலையில் நம் உடலானது நன்கு வளைந்திருக்கும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு எட்டு முறை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். கடைசியில், மூச்சை உள்ளிழுத்தபடி முழுவதுமாக மேலே வந்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்திய நிலைக்கு வந்து, மூச்சை வெளியே விட்டபடி கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
பலன்கள்: மார்புப் பகுதி நன்றாக விரிவடைந்து முதுகெலும்பை உறுதியாக்குகிறது. குறிப்பாக கீழ் முதுகு அதிகமாகப் பலன்பெறுகிறது. முட்டிகள் உடல் எடையைத் தாங்குவதால், கூடுதல் பலம் பெறுகின்றன. கைகள், தோல்கள், கால்கள் நீண்ட கால ஆரோக்கியத்துக்குத் தயாராகின்றன.

கவனம்...
  மாதவிடாய்க் காலத்தில் செய்ய வேண்டாம்.
   ஆசனங்கள் செய்யவதற்கு முன்பு அமைதியாக நின்று, கண்களை மூடி சிலமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும். பிறகு மெதுவாகக் கண்களைத் திறந்து ஆசனம் செய்யலாம்.
 ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கும் ஏற்றபடி ஆசனங்களில் சில மாற்றங்கள் தேவைப்படும். எனவே, யோகாப் பயிற்சியாளரின் உதவியுடன்  உடலுக்கு ஏற்ற யோகாப் பயிற்சிகளைச் செய்வதே சரியானது.
Monday, May 13, 2013 0 comments

பாம்பு , தேள் , பூரான், மனிதன் ,நாய் கடி விடம் நீங்க ---- சித்த மருத்துவம்,



மனிதன், பாம்பு, தேள், பூரான்,
நாய் கடி விடம் நீங்க

பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விடங்களைநீக்குவது பற்றி நாம் கதைப்போம் .
பொரும்பாலும் இந்த நச்சு விடங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில்
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விடமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .

சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விடம் முறியும் .

வண்டுகடி

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விடம் நீங்கும்.

செய்யான் விடம்

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விடம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விடம் முறியும்.

பூரான்

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விடம் நீங்கும் .
சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விடம் முறியும் .

விரியன் பாம்பு கடித்தால்

இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விடம் நீங்கும் .

நல்ல பாம்பு கடித்தால்

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும் .
தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும்
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விடம் முறியும் .

தேள் கடித்தால்

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விடம் முறியும் .
நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விடம் முறியும் .

எலிக்கடிகள்


அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விடம் முறியும் .
அவுரி மூலிகை பத்துகிரம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விடம் முறியும் .

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் .
சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
Your Ad Here